Showing posts with label நாமில் வெளியான எனது கவிதை நன்றி நாம். Show all posts
Showing posts with label நாமில் வெளியான எனது கவிதை நன்றி நாம். Show all posts

என் யன்னலோர
வேப்பமர தோழி
தலை நிறைய பூச்சூடி
என் முன்னே வெட்கபட்டு வெட்கபட்டு நிற்கிறாள்

தலைகொள்ளா பூவோடு நிற்கும்
அவளை
அண்ணாந்து பார்க்கும் போது
என் மனசுக்குள்ளும்
மத்தாப்புச்சிதறல்கள்

என் பாட்டன்
கைகளில் சிறுமியாய் சிரித்தவள்
இன்று
குமரியாய்
காதலியாய்
தாயாய்
பாட்டையாய்
பல வடிவங்களில்
எனை பார்த்து சிரிக்கிறாள்

அவள் வீட்டில்
இப்போது விருந்துக்காலம்
புதுப்புது விருந்தாளிகள்
அவர்கள் பெயர் எல்லாம் எனக்கு தெரியாது
எட்டிப்பார்க்கும் என்னையும்
வா என்கிறாள்

தன் வீடு முழுக்க
வெள்ளைக்கம்பளம் விரித்து
தன்னோடு கதை பேச வரச்சொல்லி
சில்லென்ற காற்றை
என் முகத்தோடு மோதவிட்டு வேடிக்கை காட்டி சிரிக்கிறாள்
என் தோழி,,