வெட்ட வெளியில்
அந்த ஒற்றை மரம் மட்டும்
தனந்தனியே
மெதுவாய்
தலையாட்டியபடி
அதனை சுற்றி
அதன் சகோதரத்துவங்களின்
விம்பங்கள்
விகார சிற்பங்களாய்
கையிழந்து
ஒன்றிரண்டு காலிழந்து
பலதும் தலையிழந்து
அந்த ஒற்றைமரத்தை
சுற்றி
பார்வைதொடும் தூரமெல்லம்
முடங்களாய்
அந்த ஒற்றைமரம் மட்டும்
ஓரமாய்
நடந்ததிற்கு சாட்சி
நான் என
நிசப்தமாய்
வீசும் காற்றுக்கு
கதை சொல்லியபடி
தனியே .............

6 கருத்துரைகள்:

விழிவானலை-யாழகிலன். said...
This comment has been removed by the author.
விழிவானலை-யாழகிலன். said...

மிக அழகான கவிதை வாழ்த்துக்கள் சகோதரா.

தொடர்ந்து எழுதுங்கள் எங்கள் வானலையில் வெளியாகும்..

Pena said...

அழகான,ஆழமான கவிதை,தென்றலைப்போல் சுகமாக வாசிக்க வாசிக்க சுவாசத்தில் சூடேற்றுகிறது.வாழ்த்துக்கள் நண்பரே.

Anonymous said...

Very deep poem telling so many stories.......

Admin said...

ஒற்றை மரம் அழகு..வாழ்த்துகள்..

எஸ்.மதி said...

உங்கள் வருகைக்கும் கருத்தூட்டலுக்கும் நன்றி நட்புக்களே ..

Post a Comment