மீன்முள்ளாய் தைக்கிறது
உன் பிரிவின் வலி
இனி
வெக்கப்படவோ வேதனைப்படவோ
ஒண்டுமில்லை
நீ
என்னிடம் காதலை யாசகம் கேட்ட காலம்போய்
உன்னிடம் காதலை யாசகம் கேட்டு
தினம் தினம் உன்னிடம்
பலத்த மௌனங்களால்
என்னை அழவைக்கிறாய்
ஒரு வார்த்தை
ஒரே ஒரு வார்த்தை மட்டும் பேசு
கவிதைக்குள்
உன்னை காணும் போதெல்லாம்
கண்கள் சிவக்குது
உதடுகள் நடுங்குது
மனசுக்குள் ஒரு இனக்கலவரமே வெடிக்குது
என் பதிலுக்கு
நீ காத்திருந்த காலம் போய்
உன் பதிலை பார்த்து என் காத்திருப்புகள் தொடருது
நிறைமாத வயல் அறுவடையை எதிர்ப்பார்ப்பதுபோல்
என் விழி நிறையகுளத்தோடு
உன் ஒற்றைப்பார்வைக்கு என் காலம் ஏங்குது
உன் இடக்கை மச்சத்தை
எதிர்பாராமல் பாக்கும்போது
மனசு கிடந்து தவிக்குது
சொந்தம் கொண்டாட
உனக்கு பிடிச்ச கருவாட்டுகுழம்பும்
எனக்கு பிடிச்ச புளிச்சாதமும் தனியதான் கிடக்கு
என் வயசுக்கு வந்த கவிதையெல்லாம்
கந்துவட்டிக்காரியாட்டம்
உன் காதலை வசூலிக்க
காத்துக்கிடக்கு வாசலோரம்..................
ஒண்டுமில்லை
நீ
என்னிடம் காதலை யாசகம் கேட்ட காலம்போய்
உன்னிடம் காதலை யாசகம் கேட்டு
தினம் தினம் உன்னிடம்
பலத்த மௌனங்களால்
என்னை அழவைக்கிறாய்
ஒரு வார்த்தை
ஒரே ஒரு வார்த்தை மட்டும் பேசு
கவிதைக்குள்
உன்னை காணும் போதெல்லாம்
கண்கள் சிவக்குது
உதடுகள் நடுங்குது
மனசுக்குள் ஒரு இனக்கலவரமே வெடிக்குது
என் பதிலுக்கு
நீ காத்திருந்த காலம் போய்
உன் பதிலை பார்த்து என் காத்திருப்புகள் தொடருது
நிறைமாத வயல் அறுவடையை எதிர்ப்பார்ப்பதுபோல்
என் விழி நிறையகுளத்தோடு
உன் ஒற்றைப்பார்வைக்கு என் காலம் ஏங்குது
உன் இடக்கை மச்சத்தை
எதிர்பாராமல் பாக்கும்போது
மனசு கிடந்து தவிக்குது
சொந்தம் கொண்டாட
உனக்கு பிடிச்ச கருவாட்டுகுழம்பும்
எனக்கு பிடிச்ச புளிச்சாதமும் தனியதான் கிடக்கு
என் வயசுக்கு வந்த கவிதையெல்லாம்
கந்துவட்டிக்காரியாட்டம்
உன் காதலை வசூலிக்க
காத்துக்கிடக்கு வாசலோரம்..................
1 கருத்துரைகள்:
Very nice mathi
Post a Comment