கறைபடிந்தபடியே வீசுகிறது காற்று
நேற்றைய மேகங்களை சுமந்தபடி
இழப்புகள் மீது மாக்கோலம் போட்டு
மாவிலைகள் தொங்கவிடப்பட்டுள்ளது
இரத்தம் கலந்த நிலத்தை மறைத்து காப்பெற் வீதிகள் நீள்கிறது

எதை நினைத்து அழுவது
இழந்ததற்காகவா?
மறுக்கப்பட்டதற்க்காகவா?
காரனங்கள் தெளிவாக் சொல்ல வார்த்தைகளில்லை என்னிடம்
சூனியத்தை வெறிக்கிறது விழிகள்
எதைஎதையோ ஞாபகப்படுத்துகிறது
இடியும் மின்னலும்

எதிரியான
என் நன்பனின் தோளில் கைபோடும் போதும்
மனது கடினப்படுகிறது
நரம்புகள் இறுகிறது
கறுப்பு வெள்ளை படமாய் ஏதோ கண்முன்னே தோன்றி மறைகிறது
நிஜங்கள் என்னை சுடுகிறது
மறக்கபட்டவைகள் பற்றியே
மனது அசைபோடுகிறது

கால்கள் மேற்கு நோக்கியே
நடக்க தலைப்படுகிறது
இழப்புகளை நினைத்து புலம்புகிறது இதயம்
கடினப்படுகிறது கண்கள் மீண்டும்..................


1 கருத்துரைகள்:

'பரிவை' சே.குமார் said...

கவிதை அருமை.

Post a Comment