உன் நினைவுகளின்
நடன அறையில்
கொஞ்சம் குதூகலங்கள்சில கோபதாபங்களும்
எண்ணற்ற ப்ரியங்களாலும்கண்ணீர்கோடுகளாலும்
நிறைந்து போயுள்ளது

குதூகலங்களால்துள்ளிகுதிக்கும் போது
வசந்த கால இளவரசியாய்
இறுமாந்து
இருந்ததுண்டு

உன் கோபதாபங்கள் கண்டு
கலங்கினாலும்
என்மீதான உன் அக்கறைகளின்
அளவுகளினை
அளவுகோல் கொண்டு
அளக்க முயன்றதுண்டு

நான்
உன்னில் படிக்கும் மௌன பாஷையில்
கிறங்கி போனாலும்
உன்னில்
என்னைமுழுசாய் கண்டு
அகல கண்விரிப்பதுண்டு

இப்போது
நமக்காய் கட்டிய
ஒய்யார வீட்டின் அத்திவாரம்
வலுவிழந்து
ஆட்டம் காண தொடங்கியுள்ளது

சரிபிழை புரியாது
வழிசெய்யும்மார்க்கம் தெரியாமல்
அந்தரத்தில் ஊசலாடுகிறது
சில ப்ரியங்கள் மட்டும்......................

0 கருத்துரைகள்:

Post a Comment