இந்த நிலம் இரத்தத்தின் பிசுபிசுப்பை
கேட்டு அழுகிறது
மிச்சமில்லாமல் எல்லாம் போனபிறகும்
சாம்பல்மேடு சடலங்களை கேட்கிறது திரும்பவும்

சமீபத்தில
சப்தமில்லாம் கிடந்த பீரங்கிகள் பசியெடுத்து
சாப்பாடுபோடு என் விழிபார்க்கிறது
இங்கே எதுவுமேயில்லை
அழுகுரல்களையும் பிணநாற்றத்தையும் தவிர
ஆனாலும்
இந்த நிலம் இரத்தம் கேட்டு அழுகிறது

பார்க்கும் திசையெல்லாம்
முள்ளுச்செடிக்குக் கீழே எலுப்புகள் மின்னுகிறது
தோண்டும் பக்கமெல்லாம் கல்லுகளிற்கிடையே
மண்டையோடுகளும் சிக்குகிறது

என் கடைசித்தளிரின்
இரத்தத்தை யாசகம் கேட்டு
இந்தமண் இன்னும் அழுதுகொண்டுதானிருக்கிறது

1 கருத்துரைகள்:

ம.தி.சுதா said...

இந்த மண் அழுது கொண்டே இருக்கும் சகோ...

அருமை

Post a Comment