கண்முன்னே


தூரத்தில் ஆட்காட்டிகளில் குரல்களில் 
விழித்துக்கொள்கிறது மனது
இடிந்த கட்டடங்களும் தலையில்லா மரங்களும்
நடந்ததுக்கு சாட்சியாய் 
ஆங்காங்கே

பாதிச்சாமத்தில் தொலைவில் 
ஊளையிடும் நாய்களின் குரல்களில்
மனதுக்குள்ளும் சப்பாத்துக்கால்களின் சத்தமும்
விளங்காத பாஷைககளும் மெதுவாய் 

எல்லாம் இயல்பாய் போவது போல தெரிந்தாலும்
எங்கோ ஒரு மூலையில்
நடந்தவைகள் எல்லாம் ரணமாய்
பச்சைப்புண்ணாய் தெரிகிறது

எழுதுவதற்கு எவ்வளவோ இருந்தும்
எழுத நினைத்தாலும்
என் கண்முன்னே
இவை மட்டும்தான் 
எப்போதும் நீள்கிறது.....

எஸ்,மதி

1 கருத்துரைகள்:

Puvi said...

மௌன சாட்சியாய் மாறிப்போனது வாழ்வு!

Post a Comment