ஏக்கங்களை மட்டும் 
விழிகளில் நிரப்பி கடந்ததை நினைத்து 
மனசு

பக்கத்திலிருந்தும் 
கண்ணாடி விரிசல் அப்பா
உங்களுக்கும் எனக்கும்
எப்போது தூரமானீர்கள் என்னிடமிருந்து

உங்கள் 
கைகளை விட்டு தனியே
நடக்கத்தொடங்கினேனா அப்போதா

நீங்கள் 
இல்லாமல் தனியே சைக்கிள் 
ஓடத்தொடங்கினேனே அப்போதா

உங்களுக்கு 
பிடித்ததை படிக்காமல் 
எனக்கு பிடித்ததை படிக்க தொடங்கினேனே அப்போதா

எனக்கான 
முடிவுகளை நானே 
எடுக்க தொடங்கினேனே அப்போதா


கை பிடித்து நடந்த போது
நிலா காட்டி சிரித்த போது
நான் அழுதபோது சேர்ந்து அழுத போது
கை பிடித்து எழுத பழக்கிய போது
உங்கள் தோள்களில் இருந்த போது
முடிவுகளினை தட்டிக்கொடுத்த போது 
நான் பார்த்த அப்பாவை காணவே இல்லை இப்போது

கருத்துகளும் 
முடிவுகளும்
ரசனைகளும் ஒன்று தானே 
அப்படியிருந்தும்
எப்படி வந்தது இடைவெளி ?

1 கருத்துரைகள்:

MtVenkateshwar_Strings said...

Nice mam

Post a Comment