நட்சத்திரங்கள் பூ பூக்கும் இரவில்
கானாமல் போய்க்கொண்டிருந்தார்கள் அவர்கள்
ஒன்றாய்
இரண்டாய்
நான்காய்
காரணங்கள் சொல்லப்படுவதுமில்லை
தெரிவிக்கபடுவதுமில்லை
கரு ந்தேளின் விஷவீச்சைவிட
வேகமான
வாள்வீச்சுக்கள்
மரம் செடிகள்
மிரட்டும் இருட்டு
புழுதி தெறிக்கும் மண்வீதிகளும்
கனக்கின்றன
அவர்கள் வந்துபோனதை சொல்ல
மொழிதெரியாமல்
பாலைவனத்தின் கஷ்டங்கள்
அரங்கேறுகின்றன்
மெல்ல மெல்ல
எஸ்.மதி
0 கருத்துரைகள்:
Post a Comment